News By: Suresh Waran
முருகப் பெருமான் மெய்யடியார்களே!
ஶ்ரீ தெட்சண கைலாயம் எனப் பெயர் பெற்று விளங்கும் இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாவியும் ஆழிப் பெருங்கடலும் சூழ்ந்த கோட்டையூர் என்று சிறப்பு பெற்று விளங்கும் கோட்டைக்கல்லாறு எனும் புண்ணிய பூமியில் ஒல்லாந்து காலத்திற்கும் முற்பட்ட வரலாற்றைக் கொண்டு அருள் வழங்கும் அருள்பெரும் சக்தியாகிய அன்னை ஶ்ரீ முத்து மாரியம்மனின் வலபுறத்தே அமர்ந்து வரம் அருளும் முருகப் பெருமானின் அலங்கார உற்சவம் நிகழும் குரோதி வருடம் பங்குனித் திங்கள் 22ஆம் நாள் (சனிக்கிழமை) 05.04.2025 முதல் பங்குனித் திங்கள் 28ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) 11.04.2025 வரை, பங்குனி உத்தரத்தன்று தீர்த்தோற்சவத்துடனும், திருப்பொன்னூஞ்சலுடன் இனிதே நிறைவு பெறும்.
இந்தத் திருவிழாவில் அடியார்கள் அனைவரும் ஆலயம் வருகை தந்து முருகப் பெருமானின் நல்லருள் பெறுவீராக!
No comments:
Post a Comment