T.V.S.C இன் மரதன் ஓட்டம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 14, 2015

T.V.S.C இன் மரதன் ஓட்டம்

தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியானது இன்று(2015.01.15) காலை 7 மணியளவில் கழகத்தின் தலைவர் திரு நீதிராஜா சண்முகப்பிரியன் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது.

 இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக எமது ஆலயங்களின் வண்ணக்கர் திரு சா.திருநாவுக்கரசு அவர்களும் சிறப்பு அதிதிகளாக S.செல்வராஜா(அதிபர் கோ.க.ம.வி), K .செல்வராஜா(அதிபர் கோ.க.தி.வி), திரு  இராஜசேகரன்(அதிபர் கோ.க..க.வி), வைத்தியஅதிகாரி சிறிகாந்தன் அதிபர் கணேஸ்வரன், தபாலதிபர் A.G ஜெயகாந்தன் மற்றும் கௌரவ உறுப்பினர்களான பொறியியளாளர் ப.விகர்ணன் பொறியியளாளர்  S.ஹேமகாந் ஆகியோரும் கழக உறுப்பினர்கள்,ஆலோசகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம நடுவராக ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திரு V. நமசிவாயம் அவர்கள் நடுவனம் வகித்தார். இம் மரதன் ஓட்டத்தில் 42 வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கு பற்றினார்.
இப்போட்டியின்
1ம் இடத்தை செல்வராஜா துஷ்யந்தன் அவர்களும்
இரண்டாம் மூன்றாம் இடங்களை கிருபைராஜா கிரிதரன்,s,சுகத் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர் .



















No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here