கவிதை 17 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 14, 2015

கவிதை 17

கவிதை 17, மருத்துவர் திரு.அகிலன் நடேசன், மட்டக்களப்பு, இலங்கை

அவளுக்காக காத்திருக்கிறது மனம்
அவளின் வருகையை எண்ணி
அங்கலாய்த்து அங்கலாய்த்து
விண்ணை அணணார்ந்து பார்த்து அது
விம்மி அழுகிறது
திமிர்கொண்ட கார்மேகம்
திசைமாறிப்போனதென்று
கறையான் புற்றுக்குள் கதைகள் அடிபடுகின்றன
வெயில் கொட்டித்தீர்த்த வெப்பத்தளும்புகள்
இன்னும் ஆறாமல் அப்படியே இருக்கின்றன
புல்பூண்டு செடிகொடிகளெல்லாம்
மலரும் முகம் பார்க்கும் காலம் வருமென்றும்
கருவண்டு தேனுண்டு அம்மலரில்
கண்ணயர்ந்து உறங்குமென்றும்
கனவுகள் இன்னும் இருக்கின்றன
மழைத்தேவதை வருவாள் என்று
மயங்கி நிற்கும் மானங்கெட்ட உடம்பின் மீது
வெற்றுக்தாத்தை ஊதி
வீராப்பு பேசுகிறது மேகம்
தீர்வுப்பொதிகளை காட்டி காட்டி தினந்தோறும்
எத்தி பிழைக்கிறது வானம்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here