பகுதி 19 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 26, 2014

பகுதி 19

பகுதி  19 எழுதியவர்:  திரு. விக்கி நவரட்ணம் – சுவீஸ்
எழுத்தாளர் அறிமுகம்
சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்
யாழ் வண்ணார்பண்ணை பிறப்பிடமாகும்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வாழ்வோடு இணைந்த இடமாகும்.
வண்ணார்பண்ணை  செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஆரம்ப கல்வி. பயின்று,
யாழ் மத்திய கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர்.
கொழும்பில் தனியார் தறையிலும், பின்னர், யாழ் மாநரகசபையிலும் பதவி வகித்தவர்.
யாழ் மண்ணிலேயே சிறந்த மேடைப் பேச்சாளனாக அறிமுகப் படுத்தப்பட்டவர்.
கல்வி பயின்ற காலத்தில் இயல்பாகவே கவிதை, கதைகள் எழுதுவதில் நாட்டமிருந்தாலும், புலம்பெயர் மண் புடம் போட வைத்தது.
இவரின் இலக்கியப் பணிகள் செயற்திறன் பெற்றபோது இவரின் கவிதைகளுக்கு பிரான்ஸ் ஏ.பி.சி. வானொலி தளம் அமைத்துக் கொடுத்தது.
2002ம் ஆண்டு சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் ஏ. பி. .சி. வானொலி நடாத்திய “தேன் மதுர மாலை” கலை விழாவில் இவருடைய முதல் வெளியீடான “ஆகாய கங்கை” என்ற கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது.
2003ம் ஆண்டு Nஐர்மனி “கம்” மானிலத்தில் “ஆகாய கங்கை” கவிதைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இலக்கியப் பணியில் இவரின் எண்ணங்கள் ராட்ஸச உணர்வுகளாக எழுந்து துள்ளிய துள்ளல்கள் கதைகளாக பிறப்பெடுத்தபோது உலகளாவிய ரீதியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. 1994ம் ஆண்டு சுவிஸ் தமிழர் கலாச்சார ஒன்றியம் நடாத்திய சிறு கதைப் போட்டியில் முதலாம் பரிசைப் பெற்றார்.
1995ம் ஆண்டும், 1997ம் ஆண்டும்  இவர்கள் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார்.
“காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்” என்ற ஓர் ஆவணத் தொகுப்பு 2005ம் ஆண்டு பிரான்சில் வெளிடப்பட்டது. அந்த ஆவணத் தொகுப்பில் திரு. விக்கி நவரட்ணம் அவர்களையும் இணைத்துக் கொள்ளப்பட்டது காலம் தாங்கும் வரலாற்றுச் சிறப்பாகும.;
இவருடைய இலக்கியப் பணியை பாராட்டு முகமாக பிரான்ஸ் நாட்டின் “ஏவ்றி கலாமன்றத்தின்” ப
இவர் ஓர் சிறந்த நாடகக் கலைஞர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. தானே நடித்து இயக்கிய பண்டாரவன்னியன் நாடகம் இவரின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறலாம்.
இவரின் இயற் பெயர் விக்கினேஸ்வரமூர்த்தியாக இருந்தாலும் தன் தந்தைமேல் உள்ள பாசத்தால் நவரட்ணம் என்ற தந்தையின் பெயரையும் இணைத்து இலக்கிய உலகில் விக்கி நவரட்ணம் என்ற பெயருடன் வலம் வருகின்றார். இவருடைய இலக்கியப்பணி மேன்மேலும் தொடரவும், நல்ல புகழோடு வாழவும், வாழ்த்துவோம்
தகவல் அறிமுகம் வி.எ.எ குழுமம்
திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
விழுதல் என்பது எழுகையே ……………
 பகுதி  19 எழுதியவர்: சுவிஸ்சிலிருந்து விக்கி நவரட்ணம்
தொடர்கிறது 19
¨ஹொணிலாண்ட்¨ சென்ற சிறிது நேரத்தில் டேவிட் அங்கிளுடைய மனைவி, ரொசி அன்ரி, பிள்ளைகள் லின்ரா, யஸ்மின், சகோதரி மெற்றில்டா அன்ரி, கணவர் அன்ரன், பிள்ளைகள் றொபின், nஐரால்ட் அனைவரும் என்னுடன் பழகிய விதத்தால்  தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக்கி விட்டார்கள்.
இருந்தாலும் ஒரேயொரு கவலை என் மனதை வாட்டியது. அன்ரன் அங்கிள் ஒற்றை கையில் ஊன்று தடியுடன் நடப்பதற்கு சிறிது கஸ்ரப்பட்டப்படியே நடந்தார். போகும்போது டேவிட் அங்கிளிடம் அதைப்பற்றி கேட்போம் என்ற எண்ணத்துடன் பொழுது போவதே தெரியாமல் அவர்களோடு சந்தோசமாக கழித்தேன்.
அங்கிருந்து புறப்பட்டு றெஸ்ரோறன்ரில் இரவு உணவை உண்டபின் காரில் வரும்போது அன்ரன் அங்கிளைப்பற்றி டேவிட் அங்கிளிடம் கேட்டேன்.
அன்ரன் ஒரு ¨ஸ்ரீல் பக்ரறி¨யில் மெசினிஸ்ராக வேலை செய்கிறார். ஒன்பது மாதத்திற்கு முதல் மெசின் பழுதடைந்து ¨ஸ்ரீல் பார்¨ ஒன்று உடைந்து இடுப்பில் பலமாக அடித்ததால் இடுப்பில் தசை நசிந்து விட்டது என்று டாக்ரர்கள் சொல்கிறார்கள். மாதத்தில் நான்கு முறை தெரப்பிக்கு போய்வருவார். அவரால் தொடர்ந்து அதிகநேரம் நடக்க முடியாது, அதிகநேரம் நின்றும் வேலை செய்ய முடியாது. அவருடைய இ;ன்சூரன்ஸ் தான் எல்லாமே செய்கிறார்கள்.
வருகிற பாடசாலை விடுமுறையில் மெற்றில்டா அவரைக் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டிற்கு போய் இரண்டு மாதம் கோவையில், அல்லது கேரளாவில் ஆயுர்வேத வைத்தியம் செய்து பாப்பம் என்று தீர்மானிச்சிருக்கிறார்.
¨அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன்¨ இருக்கும் இந்த நவீன மருத்துவ காலத்திலும் அவருடைய தசை நசிவுக்கு சரியான மருத்துவம் செய்ய முடியவில்லை, ஆயுர்வேதத்தையாவது செய்து பார்ப்பம் என்ற மெற்றில்டாவின் நம்பிக்கை அது!
அதுவும் ஓரளவில் சாத்தியப்படலாம். அந்தக் காலத்தில் 23 மி. மீற்றர் கருப்பையையும், அந்தக் கருப்பையில் ஐந்தாம் மாதம் காது, மூக்கு, உதடும், ஏழாம் மாதம் தலைமுடி வளரும் என ஒவ்வொரு நாளும் கருப்பையின் வளர்ச்சியை கணக்கிட்டு வைத்தவர்கள் சித்தர்கள்.
1700ம் ஆண்டில் கால்நடையாகவும், குதிரையிலும் உலகின் பல பாகங்களுக்கு சென்று ஏராளமான தாவரங்களை பதிவு செய்த சுவீடன் நாட்டு நவீன தாவரவியல் தந்தை ¨கார்ல் லின்னேயஸ்¨ என்பவருக்கு வரலாற்றில் தந்திருக்கும் மரியாதை, எங்கள் தமிழ் சித்தர்களுக்கில்லையே! அன்று அவர்கள் எழுதி வைத்த ஏடுகளில் அனேகமானவையை ஐரோப்பிய நாடுகள் கவர்ந்து வந்து இன்றும் Nஐர்மனியில் அதை பாதுகாப்பாக பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை சில வருடங்ளுக்கு முன் பத்திரிகையில் படித்த ஞாபகம்.
இறைவனின் அருளிருந்தால் மெற்றில்டாவின் விருப்பம் நிறைவேறும் என்று கூறி முடிக்கையில் எனது முகாமிற்கு முன்னால் கார் நின்றது.
¨நாளை காலை எட்டு மணிக்கு வருவேன் தயாராயிரும் சீலன்¨ என்று கூறி விடைபெற்றபோது! எல்லோருமே அன்போடு கைகளை அசைத்து விடைபெற்றார்கள்.
அவர்கள் என் கண்களில் இருந்து மறைந்ததும் முகாமிற்குள்ளே போவதற்கு திரும்பியபோது உள்ளே நின்ற விறுமாண்டி என்னைப் பார்த்து உனக்கு இவ்வளவு பெரிய குடும்ப உறவா? இரண்டு காரில் வந்த அனைவரும் இங்கு எங்கே? இருக்கிறாhர்கள் என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
எதிர்பாராமல் கிடைத்த அன்புள்ளங்களை உறவில்லையென சொல்லமனமின்றி ஆமென்று தலையாட்டிவிட்டு எனதறைக்குள் சென்றேன்.
எனக்குள் சந்தோசம் துள்ளி விளையாடியது. விழுதல் என்பது எழுதலுக்காகத் தான் என்பதை ஆண்டவன் டேவிட் அங்கிள் ரூபத்தில் உதவி புரிகிறார் என்ற எண்ணத்தோடு படுக்கையில் விழுந்தேன்.
எட்டு மணிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கு டேவிட் அங்கிள் வருவார் என்பதால் நித்திரைக்கு விடைகொடுத்து குளித்துவிட்டு முகாம் வாசலில் அவருக்காக காத்து நின்றேன்.
சரியாக எட்டு மணிக்கு வந்த டேவிட் அங்கிள்; சூரிச் மக்டொனால்;;சிற்கு அழைத்துச் சென்று டானியலிடம் என்னை அறிமுகம் செய்தவர், சற்றுத் தூரத்திலுள்ள றெஸ்ரோறன்ரில் இருப்பதாகவும் அங்கே வரும்படியும் கூறிவிட்டு சென்றார்.
டானியல் மக்டொனால்;சிற்;கு மேலே உள்ள அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று என்னிடம் டொச் மொழியில் விபரங்களை கேட்டுத் தெரிந்து, விண்ப்பப்படிவத்தை நிரப்பி, என்னிடம் போட்டோவை பெற்றுக்கொண்டதும் விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்திடும்படி கூறினார்.
கையெழுத்திட்டதும் தற்போது உமக்கு எண்பது வீதம்தான் வேலைக்கு பதிந்திருக்கு, மூன்று நாட்களுக்கு தினமும் இரண்டு மணித்தியாலம் வேலை பழக்குவார்கள். மூன்று மாதம் முடிந்ததும் நூறு வீதமாக்குவோம். அதன் பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும்போது உமக்கு உதவி மனேஐருக்கான வேலை உயர்வு தர முயற்ச்;சிப்போம். வேலை செய்து கொண்டு மொழியை படிக்க முயற்ச்சித்தால் இங்கு உமக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
ஆறு மாதங்களின் பின்னர் உமக்கு பதின் மூன்றாவது மாதச்சம்பளம் ஐம்பது வீதம் கிடைக்கும். ஒரு வருடத்தின் பின்னர் பதின்மூன்றாது மாதச்சம்பளம் நூறு வீதமாகும். ஆறு மாதத்தின் பின்னர் உமது முயற்ச்சியைப் பார்த்து உரிமையாளரிடம் பேசி மொழியை படிக்கும் செலவை நாமே பொறுப்பேற்போம் என்ற விபரங்களையும் கூறினார்.
பின்னர் என்னை கீழே அழைத்து வந்து றெஸ்ரோறன்; மனேஐருக்கும், அங்குவேலை செய்பவர்களுக்கும் அறிமுகப்படுத்தியபின், சாப்பாட்டறை, உடைமாற்றும் அறையென எல்லாவற்றையும் காட்டியதும், நான் அணியவேண்டிய உடைகள் இரண்டு Nஐhடியை தந்து மறுநாள் காலை பத்து மணிக்கு வரும்படி கூறியவர் எனது கரத்துடன் கரமிணைத்து விடைபெற்றார்.
விடைபெற்று வெளியே வந்தபின் டேவிட் அங்கிள் காத்திருந்த றெஸ்ரோறன்;றுக்குள் சென்றபோது! மேiஐயில் இருந்தபடியே அருகே இருந்த இருக்கையில் அமரும்படி எனக்கு ஐhடை காட்டி இருவருக்கும் ¨கபே ஓடர்¨பண்ணிவிட்டு நடந்தவற்றை விபரமாக கேட்டு தெரிந்து கொண்டவர், என்னைப் பார்த்து, ¨சீலன் இன்றைக்குதான் உம்முடைய முகத்தில் சந்தோசத்தை காணுறன்.¨
¨அங்கிள் உங்களை சந்திக்கிறதுக்கு முதல் எனக்கு வேலை கிடைக்கவேணும், எனது கடன் பிரச்சினைகளை தீர்க்கவேணும், என்றாவது ஒருநாள் பத்மகலாவோடு மக்டொனால்;சில் இருந்து சாப்பிடவேணுமென்று மனக்கனவு கண்டனான்.¨
¨எனக்கு மக்டொனால்சிலேயே வேலை கிடைச்சிருப்பதை என்பதை நினைச்சு பார்க்கவே முடியவில்லை. உங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.¨
¨என்னவோ தெரியவில்லை சீலன், முதல் நாள் என்னுடைய காரில் வரும்போது நீர் கவலையோடு சொன்ன உமது கடன் பிரச்சினை, உமது பல்கலைக்கழக படிப்பை தொடரமுடியாதது மட்டுமல்ல, உமது காதலி பத்மகலாவைப் பற்றி சொன்னதும் என் மனதிற்கு மனவேதனை ஏற்பட்டதால் உமக்கு உதவி செய்ய என் மனம் எண்ணியது.¨
சீலன்! கவலை இல்லாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. ஆனால், அதை எதிர்கொள்வதில் தான் ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வி, துயரம், நிம்மதி எல்லாமே இருக்கிறது. அதைத்தாமே எதிர்த்து முன்னின்று போராடுபவர்கள் ஒரு சிலர் தான்.
எதி;ர்காற்றில் மிதிக்கும் மிதிவண்டி போலவே மனிதனின் வாழ்கை ஒரு போராட்டமாகும். இனிமேல் உம்முடைய முயற்ச்சியில் தான் எல்லாமே தங்கியிருக்கு. முகாமில் இருந்து ஒவ்வொருநாளும் சூரிச் வந்து போவதென்றால் கொஞ்சம் கஸ்ரமாகத் தான் இருக்கும்.
உமக்கு வேலை கிடைத்த பின்னர் முகாமில் தங்கியிருக்க முடியாது என்பதால், தற்காலிகமாக தவராசாவுடன் தங்கியிருந்து கொண்டு வசதியாக ஒரு சின்ன அறை எடுத்தபின்னர் எல்லாம் நன்மையாக அமையும்.
இனிமேல் தான் சீலன் நீர் தனியே எடுத்து வைக்கும் காலடி ஒவ்வொன்றும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். மனிதர்களுள் பொல்லாக் குணமுடைய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு உமது பாதையில் நீர் பயணிக்கவேணும். முப்பது வருடங்களுக்கு மேல் ஐரோப்பாவில் தமிழர் இங்குள்ள சூழலுக்கேற்றவாறு வாழப்பழகிக் கொண்டார்கள். வெள்ளைக்காரன் கை குலுக்கும் போது சாதி பார்ப்பதில்லை. இங்குள்ள தமிழர்கள் வெள்ளைக்காரரோடு பழகியும், பணிபுரிந்து கொண்டும் இன்னும் சாதிக்கு கொள்ளி வைக்கிறார்களில்லை. இங்கு வளரும் தலைமுறையினருக்கும் எண்ணை ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
அடுத்தது உமது வருமானம், உமக்கு கையில் பணம் வைத்து செலவு செய்து பழக்கமில்லை. இனி கிடைக்கப்போகும் சம்பளம் மிகப்பெரிய தொகையாக உமக்கு தோன்றக்கூடும.; கண்டதையும் வாங்கி கணக்கின்றி செலவு செய்யாமல், அளவோடு செலவு செய்து கொள்;ளும். உம்முடைய உணவு, உறைவிடம், தேவையான உடைபோக மிகுதியை சேமித்து உமது கடனைத் தீர்க்கப் பாரும்.
துணிவும், தன்நம்பிக்கையுமே உமது வாழ்கைக்கு வழிகாட்டியாக இருக்கும். பொறுமை, அடக்கம் உம்மிடம் உண்டு. இதையே தொடர்ந்து நீர் கடைப்பிடித்தால் அறிவியல் என்னும் வானத்தை ஆளும்; சுகம் உமக்கு கிடைக்கும். உண்மை, நேர்மை உமது உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்
இவை தான் சீலன் உமக்கு என்னால் கூறக்கூடிய புத்திமதிகள் என்றவர், மேசையில் கபேக்குரிய பணத்தை வைத்துவிட்டு என்னை அழைத்துக்கொண்டு வெளியேறி, காரில் ஏற்றிக்கொண்டு முகாம் நோக்கி புறப்பட்டார்.
நேற்றுடன் எனது விடுமுறை முடிவுற்றது. உமக்காகத்தான் இன்று நின்றேன். பின்னேரம் எனது குடும்பத்துடன் nஐனிவாவுக்கு போயிடுவன். திரும்ப எனக்கு சூரிச் வர சந்தர்ப்பம் கிடைச்சால் உம்மிடம் வருவேன். அப்போது உம்மை நல்ல நிலையில் பார்க்கவேணும் என்று என்று கூறியவாறு வந்தவர் முகாம் வாசலில் காரை நிறுத்தினார்.
காருக்குள் இருந்தவாறு கைகுலுக்கி சிறிய ¨என்பலப்¨ ஒன்றை  எனது சேட்டுப் பையில் திணித்து, இது எனது சிறிய அன்பளிப்பு என்றவர், காரை இயங்க வைத்து என்னிடமிருந்து விடைபெறும்போது!
¨அங்கிள்! அன்ரி, மெற்றில்டா அன்ரி எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்கோ.¨
¨கட்டாயம் சொல்லுவேன்¨ என்றபடி காரை நகர்த்தினார்.
இருளில் மூழ்கியி;ருந்த எனக்கு பரிவு, பாசத்துடன் ஒளியேற்றியவர் என்னை விட்டு பிரிவதை பார்த்துக் கொண்டு நின்ற என் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
அவர்; என்னிடம் தந்த “என்பலப்பை” பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் ஆயிரம் சுவிஸ் பிராங்குகளும், சிறிய கடிதமும், அத்துடன் “விசிற்றிங் காட்டும்” இருந்தது.
கடிதத்தை பிரித்தபோது, சீலன் இந்தப் பணத்தை கையில் தந்திருந்தால் நீர் ஏற்றிருக்கமாட்டீர். தந்ததன் காரணம் நீர் முகாமை விட்டு வெளியேறினால் உமக்கு தொலைபேசி வசதியிருக்காது. இந்தப் பணத்தில் சிறிய கைத்தொலைபேசியை வாங்கவும். மிகுதியை சம்பளம் கிடைக்கும்வரை உமது வேலைக்கு சென்றுவருவதற்கான செலவுக்கு வைத்திரும்.
தொலைபேசி வேண்டியதும் பத்மகலாவுடன் உடனடியாக தொடர்பு கொண்டு, உமக்கு வேலை கிடைத்ததைப் பற்றி தெரிவியும். முடிந்தால் என்னுடைய தொலைபேசி  இலக்கத்திற்கு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்பு கொண்டு உமது சுகத்தை தெரிவிக்கவும்.
                                                         அன்புடன்
                                                       டேவிட் அங்கிள்
கடிதத்தை மடித்து வைத்துவிட்டு அவருடைய பெருந்தன்மையை நினைத்து மிக மிக சந்தோசத்துடன், எனக்கு வேலை கிடைத்ததை தவமண்ணைக்கு சொல்ல வேண்டுமென்ற ஆவலுடன் முகாமுக்குள் சென்றேன்.
தொடரும் 20

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here