வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப்பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞானபிரிவில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஏகாம்பரம் யுகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்துள்ளார்.
சற்றுமுன்னர் வெளியாகிய பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
இணையத்தளத்தில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த மாணவன் மூன்று பாடங்களில் A சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 6 ம் இடத்தையும் பெற்று மாவட்டத்துக்கும் பட்டிருப்பு கல்வி வலயத்துக்கும் பெருமைசேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக விபரங்கள் விரைவில்


No comments:
Post a Comment