ஆழ் மனம் - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 26, 2015

ஆழ் மனம்

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்...
அளவற்ற செல்வங்கள் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளன.அவற்றை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மனக்கண்களைத் திறந்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் புதையற்களஞ்சியத்தை தரிசிப்பதுதான். நீங்கள் புகழோடும், மகிழ்ச்சியோடும், அமோகமாகவும் வாழ்வதர்க்குத்தேவையான அனைத்தையும் உங்களுக்குள் இருக்கும் சேமிப்புக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
எல்லையற்ற சக்தி நிறைந்த இப்புதயற்களஞ்சியமும், அளவில்லா அன்பும் தங்களுக்குள் இருப்பதை அறிந்து கொள்ளாத மக்கள் பலரும், தங்கள் முழு ஆற்றலை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருந்து விடுகின்றனர். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.
காந்த விசையுட்டபட்ட ஓர் இரும்பு துண்டால், தன எடையை போல 12 மடங்கு எடையுள்ள பொருட்களை தூக்க முடியும்.அதே இரும்பு துண்டிலிருந்து அக்காந்த விசை நீக்கபட்டால், ஒரு இறகைக்கூட அதனால் தூக்க முடியாது.
இது போன்று, மக்களிலும் இருவகையானோர் உள்ளனர்.கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு சக்தி நிரந்த மக்கள் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் இருப்பார்கள். தாங்கள் வெற்றி நடை போட பிறந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அதே சமயம், வலுவிலந்தவர்கலாக ஏராளமான மக்கள் உள்ளனர்.அவர்கள் மனம் முழுவதும் பயங்களும் சந்தேகங்களும் நிறைந்திருக்கும்.அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது " ஒருவளை நான் தோற்றுவிட்டால் என்னவாகும்? நான் என் பணத்தை இழக்க நேரிடலாம்.மக்கள் என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள்.."என்று கூறுவார்கள்...இத்தைகைய மக்கள் வாழ்வில் வெகுதூரம் சென்றடைய போவதில்லை.முன்னேற விடாமல் தடுக்கும் அவர்களது பயம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை முடக்கி போட்டு விடும்.காலத்தால் அழியாத இந்த பரம ரகசியத்தை நீங்கள் கண்டறிந்து அதை நடைமுறைப்படுத்தினால், உங்களுக்கு வேண்டியதை ஈர்த்துக்கொள்வதக்கான காந்த சக்தியை நீங்கள் பெறலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here