கவிதை: 22 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 3, 2015

கவிதை: 22


எழுதியவர்: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன்
,கைதராபாத், இந்தியா
என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா
நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா
தமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்
தமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.
தமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்
தமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.
பலரும் போக யாக்கைக் கோலம்
அலரும் அகம் மாக்ரை கேலம்
சிலரும் யாகம் யாக்கும் சீலம்
மலரும் முகம் பார்க்கும் காலம்.
திரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்
கறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.
கரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here