கவிதை: 25 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 13, 2016

கவிதை: 25

மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின; இருபத்தைந்தாவது (25) கவிதையை எழுதியவர் யேர்மனியைச் சேர்ந்த படைப்பாளி திருமதி. மீரா குகன் அவர்கள்.
இவரின் படைப்புக்கள் தமிழக சஞ்சிகைகளான இலெமூரியா - நந்தவனம் கனடா விலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள் இலங்கைப் பத்திரிகையான தினமுரசு யேர்மனியிலிருந்து வெளிவரும் வெற்றிமணிப் பத்திரிகை மண் சஞ்சிகை ஆகியவற்றில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் மண் சஞ்சிகை நடத்திய 25வது ஆண்டு விழாவில் சிறுவர் கதைக்கான இரண்டாவது பரிசையும் இவரரல் எழுதப்படட கதை பெற்றிருக்கினறது.
இவர் கவியரங்ககளில் பங்குபற்றி வருவதுடன் இவரது ஆக்கங்கள் தமிழிதல் ஐபிசி ரிரிஎன் காட;சி ஊடகங்களில் ஒலி-ஒளிபரப்பப்பட்டன.
எமது வேண்டுகோளை ஏற்று கவிதைத் திட்டத்தில் பங்குபற்றிய திருமதி.மீரா குகன் அவர்களுக்கு தமிழ் எழுத்தாளர் இணைய அகம் பணிவன்பான வணக்கத்தையும் நன்றியைச் செலுத்துவதுடன் இம்முகநு}லிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அக முகநு}லிலும் பதிவு செய்து பெருமை கொள்கின்றது.
வழமையான இணையத்தளங்களில் இன்ற அல்லது நாளை இவரின் இக்கவிதை வெளிவரும்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
மலரும் முகம் பார்க்கும் காலம்
கண் முன்னே துயர்துடைத்து மீளும்
கருத்தை கருவிலே செதுக்கி வந்தாலும்
காத்திருந்த கணநேரத்தில் காவு கொண்ட
களத்தில் பல இன்னுயிர் பலி கொடுத்தும்
கொண்ட கொள்கையை இன்று
கொண்டாட நேரமின்றி காற்றில் பறக்க
கோணல் வழிப் பாதையில்
கொக்கரிக்கும் வீண் மானிடமே
சொந்தங்கள் தனை விலக்கி
சோதனைகள் எனும் மாயையில்
சோகம் எனும் திரைமறைவில்
சோபிக்கவும் மறந்த நிலையில்
சுயநல போர்வையில் சுற்றத்தை மறந்து
சுயம் தனை வாழ்வோட்டத்தில் இழந்து
சுகங்கள் ஒன்றே இன்று குறியாக
சுதந்திரத்தை நாமே பறிகொடுத்த பின்னும்
மாயை அகலும் இறுதி நேரம் வந்தாலும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
மகத்துவம் அறிந்த அந்த ஒரு கணம்
மடிந்தவர் மடிந்தும் வாழ்வர் என்றென்றும்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here