கவிதை: 24 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 13, 2016

கவிதை: 24

எழுதியவர் திரு. வெற்றிவேலு வேலழகன் 
-பண்ணாகம் -யேர்மனி இவர் சிறந்த கவிதைகளை பல இணையங்களிலும் சமூகத் தளங்களிலும் வெளியிட்டு வரும் ஒரு நல்ல எழுத்தாளன் ஆக உள்ளார்.
இவரின் கவிதையையும் படத்தினையும் இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலிலும் மகிழ்வுடன் பிரசுரித்து பெருமை கொள்கிறோம்.
இவரது கவிதை வழமையான இ.ணையத்தளங்களில் இன்று அல்லது நாளை பிரசுரிக்கப்படும் என்பதுடன், இக்கவிதை முன்னெடுப்பில் பங்குபற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும்.
உலக வல்லரசுகளே!
விண்வெளிக்கு சென்றவர்களே!!
விஞ்ஞான மேதைகளே!
குளாயில் குழந்தை உண்டாக்கியோரே!!
மெஞ்ஞானம் போதிப்போரே!
அணுவை ஆய்வு செய்வோரே!!
கணணிக் கனவான்களே!
உலக மயமாக்கலின் உத்தமர்களே!!
தரவரிசைப் பணக்காரர்களே!!!
இருபத்தியோராம் நூற்றாண்டில்
இது நாம் வாழும் தேசம். பார்த்தீர்களா?
என் தேசத்தை பாளைகள் நிறைந்த பனைமரம் போலே
ஏழைகள் நிறைந்த எம் தேசத்தைப் பாருங்களேன்
விதைகளற்ற வெள்ளரியையும்,
கத்தரியையும் விற்றுப் பிளைக்கும்
விலை மாதைவிடக் கேவலமான வியாபாரிகளே!
கொஞ்சம் பாருங்கள் நம் தேசத்தை!
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும் என்ற
நம்பிக்கை சாகாதவனின் ஏக்கம்.
வெ. வேலழகன் பண்ணாகம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here