கவிதை 12 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 9, 2015

கவிதை 12

திருமதி. நர்மதா சஞ்சீபன்,
யாழ்ப்பாணம்,
இலங்கை


மலரும் முகம் பார்க்கும் காலம்

அகங்காரம் அழித்து யாம் என வாழியவே பகைமொழியால்
அகஞ்சூழும் பகையணைத்து எழில் கொண்டு வாழியவே !
அரிச்சுவடி அரவணைத்து தமிழக்குயிலென்று வாழியவே !
அந்தமது இல்லையென்னும் மமதையுடன் வாழியவே !
செருக்கேறும் செழுமைபெற்ற பொற்குயிலே உந்தன்
மலரும் முகம் பார்க்கும் காலமெது உரைத்திடவா ?
ஊனமாய் ஊமைகளாய் உருக்குலைந்த உன் தளிர்கள்
உரக்க அழைத்திடும் காலமே அதுவல்லவா !
குனிந்து குனிந்து கேள்விக்குறியாய் கூன்விழுந்த முதுகுகளே !
பணிந்து பணிந்து படிக்கட்டாய்ப் போன பதிவுகளே !
கல்தோன்றி மண்தோன்றிய காலத்தின் பின்தோன்றிய
மொழிகட்கு அடிபணிதல்தான் முறையோ?
என் அன்னையைப் பெற்றெடுத்த அன்னைக்கும் அன்னையாம்
என் தமிழ்க் கிழவியவளின்
மலரும் முகம் பார்க்கும் காலம் வந்திடுமோ ?
வாராமலே அவள் ஏக்கம் வரலாறாய்ப் போய்விடுமோ?

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here