கவிதை: 23 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 13, 2016

கவிதை: 23

மலரும் முகம் பார்க்கும் காலம்'
கவிதை: 23 எழுதியவர்: திருமதி.நிவேதா உதயராஜன், இலண்டன்

மலரும் முகம் பார்க்கும் கவிதையின் இருபத்துமூன்றாவது (23) கவிதையை எழுதியவர் இலண்டனைச் சேர்ந்த படைப்பாளி திருமதி.நிவேதா உதயராயன் அவர்கள்.
இவரின் கவிதையையும் படத்தினையும் இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலிலும் மகிழ்வுடன் பிரசுரித்து பெருமை கொள்கிறோம்.
அத்துடன் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழுதல் என்பது எழுகையே என்ற நெடுந்தொடரிலும் பங்குபற்றியிருந்தார் என்பதையும் அறியத்தருகின்றோம்.
இவரது கவிதை வழமையான இ.ணையத்தளங்களில் இன்று அல்லது நாளை பிரசுரிக்கப்படும் என்பதுடன், இக்கவிதை முன்னெடுப்பில் பங்குபற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகி
கனவுகள் கவிதையாகி ஒளிருமென
கண் வளரும் நேரமெல்லாம்
கற்பனையில் கண்டு நின்றோம்
கானல் நீரை கடல் நீராய் நம்பி
காததூரம் நாம் நடந்து வந்தும்
கண்ணில் படவவே இல்லை
காத்திருப்புக்களின் கொள்வனவு
கூடிக் கொண்டாடி மகிழ்ந்திருக்க
காலத்தின் கோல நிகழ்வுகளும்
கறைபிடித்து களையிழந்து போன
கட்டடத்தின் எச்சங்களும் மட்டுமாக
கனவுகள் கலைந்த தேசத்தின்
காற்றாகிப் போன எம் கற்பனைகளும்
கடற் கோளாகிக் கலைத்துப் போனது
கலைந்துபோய் கிடக்கிறோம் நாம்
கட்டிழந்து களையிழந்து காவலற்று
கண்மலரும் முகம் பார்கும் காலம்
கண்டிப்பாய் எம் முன்னே நீளும்
கவலைகள் காற்றாகிப் போகும்
காவிய நாயகர்கள் தேசம் மீண்டும்
கண்முன்னே துயர் துடைத்து மீளும்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here